புலிகள் மீது அமெரிக்கா புகார்: பிரான்சில் எல்.டி.டி.ஈ. முக்கிய ஆலோசனை
வாஷிங்டன்:
அமைதி முயற்சிகளை சீர் குலைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரவாத்தை புலிகள் முழுமையாகக் கைவிட வேண்டும். அரசியல் எதிரிகளைக் கொல்வது போன்ற செயல்களைநிறுத்திவிட்டு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இந்த மிக சிக்கலான நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகளையும், நம்பிக்கைகளையும் தகர்க்கும் வகையில்புலிகள் செயல்பட்டு வருவது கவலை தருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 35 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருமே புலிகளின்அரசியல் எதிரிகள். இது தவிர போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி திரிகோணமலையில் புலிகள் தொடர்ந்துதங்களது படைகளின் முகாமை வைத்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இரு தரப்பினரும் நடந்து கொண்டு இனப் பிரச்சனைக்கு உரிய தீர்வைக் காணவேண்டும் என்றார் பில்ப் ரீக்கர்.
பாரிசில் புலிகள் ஆலோசனை:
இதற்கிடையே வட-கிழக்கு இலங்கையில் தங்கள் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது குறித்து அரசுகொடுத்துள்ள திட்டம் குறித்து விவாதிக்க பிரான்சில் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்துக்கு விடுதலைப் புலிகள்ஏற்பாடு செய்துள்ளனர்.
இதில் உலகம் முழுவதும் உள்ள புலிகளின் முக்கிய ஆலோசகர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த சில நாட்களில் பாரிசில் நடக்கும் இக் கூட்டத்தில் சர்வதேச சட்ட ஆலோசகர்களும் பங்கேற்க உள்ளதாகஇலங்கை அரசின் அமைதிக் குழுத் தலைவர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்தார்.
பாரிஸ் கூட்டத்துக்குப் பின் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கைதெரிவித்தார். இலங்கை அரசு- புலிகளுக்கு இடையே அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை தங்கள் நாட்டில்நடத்துமாறு பல நாடுகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.