சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பாதி சம்பளம் கூட கிடைக்காது
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதி சம்பளம் கொடுக்க அரசுவிரும்பவில்லை. அவர்களுக்கு தொகப்பூதியமாக ரூ. 4,000 மட்டுமே வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களில் தற்போது 6,032 பேரைத் தவிர மற்ற அனைவரும்பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
டிஸ்மிஸ் செய்யப்பட்ட 6,032 பேரில் 2,769 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களாக
கருதுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களாகஅறிவிக்கப்படவுள்ளனர்.
அரசுத்துறையில் சஸ்பெண்ட் செய்யப்படும் ஊழியர்களுக்கு பாதிச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்றுவிதிமுறை உள்ளது. மேலும், வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட சகல சலுகைகளும் பாதியளவில் கிடைக்கும்.
ஆனால் இவ்வாறு பாதிச் சம்பளம் கொடுக்க தமிழக அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. சஸ்பெண்ட்செய்யப்பட்டவர்களுக்கு, தாற்காலிக ஊழியர்களுக்குத் தரப்படும் சம்பளமான ரூ. 4,000த்தை மட்டும் கொடுக்கஅரசு முடிவு செய்துள்ளது.
டிஸ்மிஸ் செய்யப்பட்டு இப்போது சஸ்பெண்ட் ஆக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தலைமைச் செயலகஊழியர்கள் தான். இதனால் தலைமைச் செயலகப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, வெளி மாவட்டங்களில்பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் சிலரை தலைமைச் செயலக பணிக்கு மாற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்குத் தேவையான அரசு உத்தரவு தயாராகி விட்டதாகவும், விரைவில் அது பிறப்பிக்கப்படும் என்றும்தெரிகிறது.
மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கும், தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் இடையே நிறையவேறுபாடுகள் உள்ளன. எனவே, அதற்கேற்ற வகையில் தலைமைச் செயலக பணி விதிமுறைகளில் திருத்தம்செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தம் 5,116 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் 1,978 பேர் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர், 580 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கும் மேற்பட்டஊழியர்கள் தற்போது அங்கு பணியில் இல்லை.
இதனால் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இதையடுத்தே, வெளிமாவட்ட ஊழியர்களை தலைமைச் செயலகப்பணிகளில் ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.