அந்த 6,072 பேர் யார்?: அச்சத்தில் அரசு ஊழியர்கள்
சென்னை:
வேலை நிறுத்தத்தில் தீவிரம் காட்டிய 6,072 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க இயலாது என தமிழக அரசுகூறியுள்ளது.
இவர்கள் தவிர்த்த 8,063 பேரை மட்டுமே பணியில் சேர்க்க உள்ளது. ஆனால், அந்த 6,072 பேர் யார், யார்?, 8,063பேர் யார், யார் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் தங்களது பெயர் எந்தப் பட்டியலில் உள்ளது என்று தெரியாமல் ஏராளமான ஊழியர்கள் அச்சத்திலும்பெரும் குழப்பத்திலும் உள்ளனர்.
இந்த 6,072 பேர் பட்டியலில் கைதான 2,211 பேரின் பெயர்களும் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 2,215பேரின் பெயர்களும் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மற்றவர்கள் யார் என்பது தெரியவில்லை.
டிஸ்மிஸ் ஆன ஊழியர்கள் அனைவருமே நேற்று தங்களது துறை அதிகாரிகளிடம் சென்று மீண்டும் வேலையில்சேர்த்துக் கொள்ளுமாறு கூறினர். ஆனால், மேலிடத்தில் இருந்து உத்தரவு வரவில்லை எனக் கூறி அதிகாரிகள்இவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
டெல்லி சென்றிருந்த பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறைசெயலாளர் மெய் கண்டதேவன் ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் நேற்றிரவு சென்னை திரும்பினர்.
இன்று தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ் சென்னையில் இல்லை. டெல்லியில் நடக்கும் காவிரிகண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். எனவே, இன்று இந்த பிரச்சினை பற்றிஆராய அனைத்து செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) தான் நடைபெறும்.
செயலாளர்கள் கூட்டம் நடந்து, மாவட்ட கலெக்டர்களுக்கும், துறை தலைவர்களுக்கும் உத்தரவுகள் அனுப்பப்படவேண்டும். அதன் அடிப்படையில் 8,063 பேர்கள் பட்டியலையும் வெளியிட்டு அவர்களை வேலைக்கு சேர்க்கஅடுத்த வாரம் ஆகிவிடும் என்று தெரிகிறது.
8,063 பேரில் பெரும்பாலானவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் தங்கள் அலுவலகங்களுக்கு வந்தனர். ஆனால்.அவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால் பலரும் கலங்கிய விழிகளுடன் அலுவலகவளாகங்களிலேயே உட்கார்ந்திருந்துவிட்டு மாலையில் திரும்பிச் சென்றனர்.
இன்று முதல்வர் ஜெயலலிதாவும் தலைமைச் செயலாளரும் சென்னை திரும்பிய பிறகு, வேலையில்சேர்க்கப்படவுள்ள 8,063 பேரின் பட்டியல் நாளையே கூட வெளியாக வாய்ப்புள்ளதாக இந்த ஊழியர்களுக்குசில அதிகாரிகள் நம்பிக்கை அளித்து அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications