திசை மாறி கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தைக் குட்டி
கோவை:
கோவை அருகே மதுக்கரை என்ற இடத்தில் காட்டிலிருந்து தாயுடன் தப்பி வந்த சிறுத்தைக் குட்டி மரப்பாலம் என்றஇடத்தில் வழி தெரியாமல் திரிந்தது. அதை கிராமத்து மக்கள் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.
மரப்பாலம் கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. இதனால் அவ்வப்போது காட்டு விலங்குகள்அங்கு வருவது வழக்கம். அதுபோலவே ஒரு சிறுத்தை, தனது குட்டியுடன் அங்கு வந்துள்ளது.
சிறுத்தையைப் பார்த்த நாய்கள் அவற்றை விரட்டத் தொடங்கின. அப்போது தாய் சிறுத்தை வேகமாக ஓடி விட்டது.ஆனால் குட்டி சிறுத்தையால் ஓட முடியாமல் அங்குமிங்கும் ஓடி, கிராமத்துக்குள் நுழைந்தது. அதை நாய்கள்விரட்டி வந்தன.
இதைப் பார்த்த கிராம மக்கள், குட்டி சிறுத்தையை நாய்களிடமிருந்து மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல்கொடுக்கப்பட்டு அவர்களிடம் குட்டி சிறுத்தை ஒப்படைக்கப்பட்டது.
பிறந்து ஒரு மாதமே ஆகும் அந்த குட்டி சிறுத்தையை தாய் சிறுத்தையிடம் ஒப்படைக்க வனத்துறையினர் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications