For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரை, திருச்சி, நெல்லை, சேலத்தில் மகளிர் நீதிமன்றங்கள் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய நகரங்களிலும் மகளிர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் துரிதமாக விசாப்பதற்காக மகளிர் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் இந்த நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன.

தற்போது மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் நகரங்களில் மகளிர் நீதிமன்றங்கள்தொடங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 23ம் தேதி இவற்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

சென்னை குடும்ப நீதிமன்ற முதன்மை நீதிபதி அருணா ஜெகதீசன், மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி தாயாரம்மாள், திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும்கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி வாசுகி, சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி கலாவதி, திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும் கூடுதல் பொறுப்புவகிப்பார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X