For Daily Alerts
Just In
டிஸ்மிஸ் பட்டியல் பயம்: அதிர்ச்சியில் ஊழியர் சாவு
கோவை:
டிஸ்மிஸ் ஆனவர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெற்று விடுவோமோ என்ற அதிர்ச்சியில், கோவையைச்சேர்ந்த அரசு ஊழியர் மரணமடைந்தார்.
வேலை நிறுத்தம் செய்த கோவை வணிகவரித்துறை ஊழியர்கள் 320 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தற்போதுஉச்சநீதிமன்ற உத்தரவுப்படி இவர்களில் பலருக்கும் மீண்டும் வேலை கொடுக்கப்படவுள்ளது. ஆனால் யாருக்குவேலை கிடைக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந் நிலையில் பிரான்சிஸ் சாலமன் என்ற வணிகவரித்துறையின் பதிவுப் பிரிவு எழுத்தர், தனது பெயர் டிஸ்மிஸ்ஆனவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுமோ என்ற பயத்தில் இருந்தார். வீட்டில் பிரமை பிடித்தவர் போலஇருந்து வந்தார்.
இந் நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக இறந்தார்.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]