For Daily Alerts
Just In
சஸ்பெண்ட் ஆனவர்களுக்கு 29ம் தேதி பாதிச் சம்பளம்
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் ஆன 2749 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் 29ம்தேதி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6072 ஊழியர்களில் 3233 பேருக்கு சம்பளம் கிடைக்காது. மீதமுள்ள2749 பேருக்கு மட்டுமே சம்பளம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு விதிமுறைப்படி பாதிச் சம்பளம் வழங்கப்படும் என்றும், வரும் 29ம் தேதி தான் இந்தப் பாதிச் சம்பளம்வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.
மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மற்ற 8063 ஊழியர்களுக்கும் ஜூலை மாதம் 25ம் தேதி முதல்சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Saturday, May 24, 2003, 5:30 [IST]