மும்பை அருகே கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்: 25 ஓ.என்.ஜி.சி. பொறியாளர்கள் சாவு
மும்பை:
மும்பை அருகே ஹெலிகாப்டர் அரபிக் கடலில் விழுந்தது. இதில் பயணம் செய்த ஓ.என்.ஜி.சி. (Oil and natural gasLTD) பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இன்னொருவர்மரணமடைந்தார். இவர் தவிர மேலும் 24 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நடுக் கடலில் இந்த விபத்து நடந்தது.
மெஸ்கோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானது அந்த எம்-172 ரக பயணிகள் ஹெலிகாப்டர்.
இன்று பகல் 12 மணியளவில், கடலுக்குள் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சாகர் கிரண் என்ற எண்ணெய் கிணறில்இருந்து அந்த ஹெலிகாப்டர் கிளம்பியது. அதில் விமானிகள் உள்பட 29 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும்ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள்.
தங்களது பணி முடிந்து கிளம்பிய என்ஜினியர்கள், அதிகாரிகளுடன் அந்த ஹெலிகாப்டர் மும்பை ஜூகுவில் உள்ளஹெலிபேசுக்கு வந்து கொண்டிருந்தது. 12.15 மணியளவில் அந்த ஹெலிகாப்டர் கடலுக்குள் விழுந்தது.
இதையடுத்து இந்திய கடற்படை ஹெலிகாப்டர்களும், கடலோரக் காவல் படை கப்பல்களுந், ஓ.என்.ஜி.சியின் அதிவிரைவுப் படகுகளும் அந்த இடத்துத்து விரைந்தன. இதுவரை 4 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.அதில் ஒருவர் பின்னர் இறந்தார்.
மற்றவர்களைத் தேடும் பணி நடக்கிறது. ஆனால், இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. இதனால் அந்த 25பேரும் இறந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதில் 4 பேர் பைலட்களாவர்.