For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீரணி அரங்கம் இடிப்பின் பின்னணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த சீரணி அரங்கத்தை இடிப்பது தொடர்பாக கடந்த7ம் தேதியேஅதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.

சீரணி அரங்கத்தை இடிக்க வேண்டும் என்று கடந்த7ம் தேதி ரகசிய உத்தரவு ஒன்றை பொதுப்பணித்துறைஅதிகாரிகளுக்கு அரசு அனுப்பி வைத்தாக் கூறப்படுகிறது.

ஆனால், அதை ரகசியமாக வைத்திருக்குமாறும், இடிப்பை எதிர்த்து யாரும் நீதிமன்றத்தை அணுகிவிடாமல் தடுக்கநீதிமன்றம் விடுமுறையில் இருக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை ஒட்டி இந்த அரங்கத்தை இடிக்கவும் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்தே சனிக்கிழமை இரவில் இந்த அரங்கம் இடிக்கப்பட்டது. இந்த அரங்கத்தில் வாரந்தோறும் கிருஸ்துக்கூட்டங்கள் நடப்பது வழக்கம். இதில் லட்சக்கண்ககானவர்கள் பங்கேற்பார்கள்.

இதை இடித்துத் தள்ளிவிட்டதுடன் இனிமேல் கடற்கரையில் பொதுக்கூட்டம், மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடத்தத்தடை விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவது கிருஸ்துவக் கூட்டங்கள் நடத்துபவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X