ஜெ. தலைமையில் கடற்கரை ஆணையம்
சென்னை:
இதற்கிடையே, மாநில கடற்கரை நிர்வாக ஆணையம் என்ற ஒரு அமைப்பை மாநிலஅரசு தொடங்கியுள்ளது. அதற்கு முதல்வர் தலைவராக இருப்பார். அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர்உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இதுதவிர பல்துறை செயலாளர்களும் ஆணைய உறுப்பினர்களாக செயல்படுவர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளையும் இந்த ஆணையம் தனது கட்டுப்பாட்டுக்குள்வைத்திருக்கும். இதுதவிர சென்னை பெருநகர கடற்கரை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு மெரீனா , எலியட்ஸ், சாந்தோம், திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரைப் பகுதிகளை தனதுகட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். அதேபோல, மாவட்ட கடற்கரை நிர்வாக குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் நாகப்பட்டனம், கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரிஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள்உறுப்பினர்களாக இருப்பார்கள்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கடற்கரைக் குழுக்கள், கடற்கரைப் பகுதியை பாதுகாப்பாகவும்,தூய்மையாகவும், சுற்றுச்சூழல் கெடாமலும் பார்த்துக் கொள்ளும் வகையில் செயல்படும் என்றும் அரசுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications