அத்வானியின் பொதுக் கூட்டமும்.. சீரணி அரங்க இடிப்பும்: பா.ஜ.க. விளக்கம்
சென்னை:
சென்னை நகரில் பொதுக் கூட்டம், மாநாடுகள் நடத்த மாற்று இடத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றுபா.ஜ.க. தேசியச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டுள்ள ரத யாத்திரையின்நிறைவு விழா ஆகஸ்ட் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி சீரணி அரங்கத்தில் துணைப் பிரதமர் அத்வானிதலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்தக் கூட்டத்தைத் தடுக்கத் தான் சீரணி அரங்கத்தை அதிமுக அரசு இடித்து விட்டதாக சிலர் கூறுகின்றனர்.ஆனால், நாங்கள் அப்படிக் கருதவில்லை. அந்தக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்வதாகவும் இல்லை.
கூட்டத்தை தங்க சாலையில் நடத்தத் திட்டமிட்டு அதற்கான காவல்துறை அனுமதியையும் நாங்கள் ஏற்கனவேவாங்கி விட்டோம். எனவே அத்வானி வருகையால்தான் சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதாக கூற முடியாது.
அதே நேரத்தில் பொதுக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்த மாற்று இடத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
தங்கச்சாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் எங்கள கட்சியின் அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடுகலந்து கொள்கிறார் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications