கபிணி அணை திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிது. இந் நிலையில் கபிணி அணையில் இருந்துகர்நாடகம் நீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால் அந்த நீரும் நாளை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் கபிணி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. இந்த நீர் நாளை(புதன்கிழமை) மாலைக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,070 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய நீர் வளத்துறையின் 4 பேர் கொண்ட நிபுணர் குழுநாளை மறுநாள் மேட்டூர் அணையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.