For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூஸுக்குத் தாவும் இளசுகள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோக், பெப்சி பீதி இளைஞர்கள், இளைஞிகளை நன்றாகவே தாக்க ஆரம்பித்துள்ளது. இதனால் குளிர்பானங்களிலிருந்து ஜூஸ், இளநீர் என தாவ ஆரம்பித்துள்ளனர்.

கோக், பெப்சி குளிர்பானங்களில் நச்சுப் பொருட்கள் இருப்பதாகவும், புற்று நோய் வரும் ஆபத்து இருப்பதாகவும்டெல்லியில் உள்ள சமூக நல ஆய்வு மையம் கூறினாலும் கூறியது, வெளிநாட்டு குளிர்பானங்கள் மக்களிடையேபீதியை ஏற்படுத்தியுள்ளன.

கோக், பெப்சியை அதிகம் அடிக்கும் இளைஞர், இளைஞிகள் குழம்பிப் போயுள்ளனர்.

இதனால் பிரச்சினையே வேண்டாம் என்று விதவிதமான பழச்சாறுகள், இளநீர், ஐஸ்மோருக்கு மாறி வருகின்றனர்.இதனால் சென்னை, சேலம், மதுரை, திருச்சி. கோவை போன்ற முக்கிய நகரங்களில் ஜூஸ், இளநீர் விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும், கோக், பெப்சியின் விற்பனை அடிமட்டத்தைத் தொட்டுள்ளதாகவும் தகவல்கள்வருகின்றன.

மேலும் உள்ளூர் குளிர் பானங்களும் கூடுதலாக விற்கத் தொடங்கியுள்ளன.

கோக், பெப்சி குறித்து தெளிவான நிலை ஏற்படும் வரை தற்காலிகமாகவே ஜூஸ் சாப்பிடத் தொடங்கியுள்ளதாகபலர் கூறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X