For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்யூஷன் படிக்க மறுத்த மாணவிகளுக்கு பிரம்படி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளை டியூஷன் படிக்கச் சொல்லி பள்ளி ஆசிரியை துன்புறுத்துவதாகவும்,அதுதொடர்பாக புகார் கூறச் சென்றால் தலைமை ஆசிரியை அடிப்பதாகவும் மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளி. இங்கு வேதியியல் ஆசிரியையாகஇருப்பவர் சீதாலட்சுமி. இவர் தனது வகுப்பில் சரியாக பாடம் நடத்துவதில்லை என்று கூறப்படுகிறது. அத்தோடு,தனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்தாக வேண்டும் என்று மாணவிகளை கட்டாயப்படுத்துவதாகவும்கூறப்படுகிறது.

இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் மாணவிகள் புகார் கொடுத்தனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும்எடுத்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் 20 மாணவிகள்வேதியியல் பாடத்தில் தோல்வியுற்றனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட 20 மாணவிகளையும் தலைமை ஆசிரியை வெயிலில் நிற்க வைத்தும், பிரம்பால்அடித்தும் உள்ளார். இதில் சில மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தங்களதுபெற்றோரிடம் மாணவிகள் கூறவே, அனைவரும் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். தலைமை ஆசிரியை அறையைமுற்றுகையிட்ட அவர்கள் தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X