ஜனனியின் ரூ. 1.4 கோடி பணத்தை வங்கியில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடராஜனுக்கு நெருக்கமான மதுரைப் பெண் ஜனனியின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ரூ.1.40 கோடி பணத்தைவங்கியில் இருப்பு வைக்க காவல்துறைக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணம் இதுவரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணம் எப்படி வந்தது, அதற்கு வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால்அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மதுரை வருமான வரித்துறை போதைப்பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், பணத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.இதையடுத்து பெரிய டிரங்க் பெட்டியில் பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணம் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

அங்கு நீதிபதி முன்னிலையில், பணத்தை வருமான வரித்துறை துணை ஆணையர் பழனிவேல்ராஜன் எண்ணினார்.பின்னர். நோட்டுக்களின் எண்களை குறித்துக் கொண்டார்.

அதன் பின்னர் பணத்தை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 3 மாதத்திற்கு இருப்புவைக்குமாறு நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார்.

ஜனனியின் காரும், நகைகளும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா கடத்தி இந்தப் பணத்தை ஜனனி சம்பாதித்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இந்தப் பணம்நடராஜன் மூலம் ஜனனிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+