பெங்களூரில் அழகிரி: விடாமல் கண்காணிக்கும் தமிழக உளவுப் பிரிவினர்
பெங்களூர்:
நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரில் தங்கியிருக்கும் மு.க. அழகிரி தினமும் அங்குள்ள முதன்மை செசன்ஸ்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அவரைக் கண்காணிக்க தமிழக உளவுப் பிரிவு போலீசார் பெங்களூரில்முகாமிட்டுள்ளனர்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த அழகிரி பெங்களூர் நீதிமன்றத்தில் தினமும்கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பெங்களூர் வந்துள்ள அழகிரி ஜே.பி. நகர் நான்காவது கிராசில் உள்ள தனது சகோதரி செல்வியில்ன்வீட்டில் தங்கியுள்ளார். உடன் அவரது குடும்பமும் தங்கியுள்ளது. அங்கிருந்தபடி நேற்றும் இன்று காலையும்நீதிமன்றத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அழகிரியைத் தொடர்ந்து பெங்களூர் வந்துவிட்ட தமிழக உளவுப் பிரிவு போலீசார் ஷிப்ட் முறையில் அவரைக்கண்காணித்து வருகின்றனர். செல்வியின் வீட்டின் தெரு முனையில் சாதாரண உடையில் தமிழக போலீசார் நின்றுகண்காணித்து வருகின்றனர்.
அழகிரியைச் சந்திக்க வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவரைச் சந்திக்க வரும் கர்நாடக திமுகவினரைப்பிடித்து கெஞசி யார், யார் அழகிரியைச் சந்தித்தனர் என்பது போன்ற விவரங்களையும் சேகரித்து உடனுக்குடன்சென்னைக்கு அனுப்புகின்றனர்.
அதே போல அழகிரி நீதிமன்றத்துக்கு வரும்போதும் தமிழக போலீசார் தொடர்ந்து வருகின்றனர். இந்த உளவுபார்க்கும் பணியில் ஒசூர் சிபிசிஐடி பிரிவு போலீசாரும் உளவுப் பிரிவு போலீசாருக்கு உதவி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications