ஈவ்-டீசிங்: மருத்துவமனை பெண் ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள குலசேகரத்தில் மருத்துவமனைக்குள் புகுந்த ரெளடிக் கும்பல் அங்கிருந்த இரு பெண்ஊழியர்களை கேலி செய்தது. மிகக் கேவலமான வார்த்தைகளால் அக் கும்பல் தங்களை விமர்சித்தால் அவர்கள்இருவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதைடுத்து 3 ரெளடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிணந்தோடு என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப்-டெக்னீஷியன்களாக பணியாற்றிவருபவர்கள் மேரி பெல்லா ஏஞ்சல் (20) மற்றும் சிபியா (18) ஆகியோர்.
இவர்களை சுனில், வின்சென்ட், ஏசுதாஸ் ஆகிய மூவரும் அடிக்கடி வழி மறித்து கேலி செய்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இவர்களை மருத்துவமனை வரை தொடர்ந்து வந்த இந்த மூவரும், குடிபோதையில், மிகமோசமான வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர்.
நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் முன் தாங்ளைக் கிண்டல் செய்ததால் மனமுடைந்த இந்த இருபெண்களும் ஏகப்பட்ட தூக்க மாத்திரிகைள உண்டனர். இதையடுத்து மயங்கி விழுந்த அவர்களை அதேமருத்துவமனையின் டாக்டர்கள் காப்பாற்றினர்.
இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மார்த்தாண்டத்தில் உள்ள இன்னொரு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் பெண்களை தற்கொலைக்குத் தூண்டிய மூன்று ரெளடிகளையும்கைது செய்தனர். அவர்கள் மீது ஈவ்டீசிங் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிக அளவில் ஈவ்-டீசிங் நடந்து வருவது கன்னியாகுமரிமாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications