காவிரி டெல்டாவில் தொடர்ந்து கன மழை: கரைபுரளும் மகிழ்ச்சி வெள்ளம்
தஞ்சாவூர்:
தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டாப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
அதே போல கர்நாடகத்திலும் மழை பெய்து வருவதால் காவிரியில் நீர் வரத் தொடங்கியுள்ளது.இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 40 அடியைத் தொட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில்கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டாப் பகுதிவிவசாயிகள் சந்தோஷமடைந்துள்ளனர்.
மேலும், கர்நாடக காவிரி டெல்டாப் பகுதிகளிலும், கபினி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியிலும்தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்துஅதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 40 அடியைத் தொட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குஅதிகரித்து வருவதாலும், காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சித்தாண்டவமாடுகிறது.