இளங்கோவனுக்கு பா.ஜ.க. கறுப்பு கொடி: பதிலுக்கு காங்கிரஸார் செருப்பு வீச்சு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், தலைவர் சோ.பா,மேலிடப் பார்வையாளர் சத்யஜித் கெய்க்வாட் ஆகியோருக்கு பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி காட்டினர். இதைஎதிர்த்து காங்கிரஸ் தொண்டர்கள், பா.ஜ.க.வினர் மீது செருப்பு வீசினர். இதனால் அந்தப் பகுதிகளில் பதற்றம்ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழாவையொட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்கலந்து கொள்வதற்காக சோ.பா, இளங்கோவன், கெய்க்வாட் ஆகியோர் கார்களில் ராமநாதபுரம் வந்தனர்.
அவர்களது வருகையை எதிர்த்து பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பா.ஜ.கவினர் துரை கண்ணன்என்பவரது தலைமையில்கருப்புக் கொடி காட்டினர். இவர்களை போலீஸார் தடுக்கவில்லை. மாறாக பாதுகாப்பாகநின்றிருந்தனர்.
இதைப் பார்த்து ஆவேசமடைந்த, கார் ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த சில காங்கிரஸார், பா.ஜ.கவினர் மீதுசெருப்புகளை வீசினர். இதையடுத்து பா.ஜ.கவினர் காங்கிரஸ் தலைவர்கள் சென்ற கார்கள் மீது கற்களை வீச,பதிலுக்கு காங்கிரசாரும் கல் வீசினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர்.
உடனே அங்கு விரைந்த மாவட்ட காவல்துறைக் கண்காணிபபாளர் அசோக் குமார் தாஸ், டி.எஸ்.பி தாமோதரன்ஆகியோர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications