தமிழை செம்மொழியாக அறிவிக்கக் கோரி டெல்லியில் நாளை உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மொழியை செம்மொழியாக (classical language) அறிவிக்கக் கோரி டெல்லியில் நாளை தமிழறிஞர்களின்உண்ணாவிரதம் நடக்கிறது. நாடாளுமன்றத்தின் முன் நடக்கவுள்ள இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின்அனைத்துக் கட்சி எம்.பிக்களும் உரையாற்ற உள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்கள் மட்டுமின்றி பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறுபகுதிகளிலும் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

இந்த போராட்டத்துக்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காங்கிரஸ்கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழறிஞர்கள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதக்கிறது. அவர்களது போராட்டம் வெற்றி பெற உளப்பூர்வமாக வாழ்த்துகிறோம். இந்தக் கோரிக்கை அரசியலுக்கும் அப்பாற்பட்டது. தமிழ் மொழி உலகின்தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை உலகமே அறியும். இதை மத்திய அரசுக்கும் உணர்த்தவே இந்தப்போராட்டம்.

செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருக்கும்போது அதைசெம்மொழியாக அறிவிப்பதில் மத்திய அரசு இத்தனை கால தாமதம் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றுகூறியுள்ளார். (மத்தியில் சுமார் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஏன் தமிழை செம்மொழியாகஅறிவிக்கவில்லை?)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+