ஜெ. பேச்சு ஏமாற்றம் தருகிறது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையில் முக்கிய அறிவுப்புகள் எதுவும் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம்தருவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் ளிெயிட்டுள்ள அறிக்கையில், முக்கியப் பிரச்சினைகளான காவிரி, கச்சத் தீவு மீட்பு, மது விலக்கு தொடர்பாகஎந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இது ஏமாற்றம் தருகிறது.
முக்கிய பிரச்சனைகளில் முடிவு எடுக்கும் திறமை இந்த அரசுக்கு இல்லாததையே ஜெயலலிதாவின் பேச்சுவெளிப்படுத்தியுள்ளது.
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதை பாமகவரவேற்கிறது. அதேபோல, ரேஷன் அரிசி விலையைக் குறைப்பையும் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications