பொது சிவில் சட்டம் வேண்டும்: அதிமுக தீர்மானம்
சென்னை:
நாட்டில் உடனடியாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர பா.ஜ.க. முயன்று வருகிறது. இதனால் சிறுபான்மையினரின் உரிமைகள்பறிக்கப்படும் என காங்கிரஸ், திமுக ஆகியவை எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியது மிக மிக அவசியம் என அதிமுக செயற்குழுவில்இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல், சமூக, இயற்கையின் நியதிப்படி நாட்டின் இன்றைய மிக முக்கியஅவசியமாக பொது சிவில் சட்டம் உள்ளது.
இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை அதிமுக ஆதரித்து வாக்களிக்கும் என்று அந்தத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் காவிரிப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண மத்திய அரசு முயல வேண்டும் எனவும், இந்த விஷயத்தில்தமிழகத்தை ஏமாற்றி, மோசடி செய்து வரும் கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க மத்தியஅரசு போர்க் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
இது தவிர ஜெயலலிதா அரசின் பல்வேறு நடவடிக்கைகளைப் பாராட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தயாராருமாறு கட்சியினருக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்.இப்போதே அதற்கான ஆரம்பப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications