மெரீனா இடிப்பு தொடர்கிறது .. மேலும் 2 கட்டடங்கள் "டமால்"
சென்னை:
மெரீனா கடற்கரையில் உள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்படுவது தொடர்கிறது. முதலில் சீரணி அரங்கம்இடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மேலும் 2 கட்டடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த வரலாற்றுப் புகழ் வாயந்த சீரணி அரங்கம் திடீரென்று கடந்த வாரம்இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு தற்போது வெறும் மணல்தான் உள்ளது.
சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில்மெரீனா கடற்கரையில் இருந்த மேலும் 2 பழைய கட்டடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.
அண்ணா நீச்சல்குள வளாகத்தில் உள்ள பழைய கட்டடம் நேற்று இரவு இடித்துத் தள்ளப்பட்டது. அங்குள்ள உடைமாற்றும் அறை உள்ளிட்ட சில அறைகள் இடித்துத் தள்ளப்பட்டன. அதேபோல, மாநிலக் கல்லூரிக்கு எதிரேஇருந்த பழைய புகாரி ஹோட்டல் கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவை இரண்டும் இடித்துத் தள்ளப்பட்டன.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் அபூர்வா கூறுகையில், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. மெரீனாகடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு கட்டடங்களும் பாழடைந்த நிலையில் இருந்தன. எனவே அவற்றை இடித்துத் தள்ளி விட்டோம்.இரண்டுமே மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள். இரவில் இடித்துத் தள்ளியதற்கு விசேஷ காரணம் எதுவும்இல்லை.
பகலில் இந்தப் பணிகள் நடந்தால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும், எனவேதான் இரவில் இடிக்கிறோம்என்றார் அவர்.
மெரீனா கடற்கரையில் தொடர்ந்து பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருவது சென்னை மக்களிடையேபல்வேறு கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.