தீவிரவாதி அறிவழகன் கைது: வீரப்பனுக்கு ஏ.கே-47 கொடுத்தவர்
பெரம்பலூர்:
தமிழர் விடுதலை இயக்க பொதுச் செயலாளர் அறிவழகன் பெரம்பலூர் மாவட்டம் அரியலூல் கைதுசெய்யப்பட்டார்.
தமிழர் விடுதலை இயக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்தநிர்வாகிகளை போலீஸார் வலை வீசித் தேடி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர்தலைமறைவாகிவிட்டனர்.
இந் நிலையில் அரியலூர் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வாகனத்தைப்போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதில் இருந்தவர் போலீஸாரைக் கண்டதும், தன்னிடமிருந்த வெடிகுண்டுகளைக்காட்டி தன்னை பிடிக்க முயன்றால் வெடிகுண்டு வீசுவேன் என மிரட்டினார். இருப்பினும் போலீஸார் அவரைவளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலை இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் அறிவழகன்என்று தெரியவந்தது.
இவர் மீது தஞ்சை, கடலூர், பெரம்பலூர் ஆகிய நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. சந்தனக் கடத்தல்வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிக் கொடுத்ததாகவும் இவர் மீது புகார் உள்ளது.
அறிவழகன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications