சினிமாவில் அசிங்கமான பாட்டுகள் வேண்டாம்: பெண்கள் அமைப்பு கோரிக்கை
சென்னை:
சினிமா படங்களில் இரட்டை அர்த்தம் பொதிந்த, அசிங்கமான வார்த்தைகள் கொண்ட, அருவருக்கத்தக்கபாடல்களை எழுத வேண்டாம் என்று வைரமுத்து உள்ளிட்ட பாடலாசிரியர்களுக்கும், இதுபோன்ற காட்சிகளில்நடிக்க வேண்டாம் நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலமாக தமிழ் சினிமாக்களின் பாடல் வரிகள் பெண்களால் கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாகஉள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும்வர்ணிப்பதும், யாருக்குமே புரியாத வார்த்தைகளும் அடங்கியதாக தமிழ் சினிமாப் பாடல்கள் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், உதித் நாராயண் போன்றவர்கள் பாடும்போது வார்த்தைக் கொலைகளுக்கும் பஞ்சமே இல்லை.
இந் நிலையில் தமிழ் சினிமாவில் இனிமேல் ஆபாசமான பாடல்களை எழுத வேண்டாம் என்று கோரி பிரபலபாடலாசியர் வைரத்து உள்ளிட்ட தமிழ் சினிமா பாடலாசியர்களுக்கும், இதுபோன்ற பாடல் வரிகளுக்கு பாடி, ஆடநடிக்க வேண்டாம் என்று விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடிதம்எழுதியுள்ளது.
இந்தக் கடிதங்களில், இளைஞர்களை மிகவும் பாதிக்கும் வகையில் பாடல் வகள் உள்ளன. இரட்டை அர்த்தம்பொதிந்த பாடல் வரிகள், மீண்டும் மீண்டும் டிவி, ரேடியோக்களில் போடப்படும்போது, பெண்களை கேலிசெய்வதும், கொச்சையாக விமர்சிப்பதும் தங்களது வாழ்க்கை லட்சியம் போல இளைஞர்கள எடுத்துக்கொள்கிறார்கள்.
மேலும் பாலியல் வன்முறைகளுக்கும் இது வித்திடுகிறது.
எனவே பாடலாசியர்களும், நடிகர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். நல்லவிஷயங்களை பாடல்களில் சொல்ல வேண்டும். ஈவ் டீசிங் குறித்தும் அதை ஒழிப்பது குறித்தும் பாடல்களில்எழுதலாம், அதுகுறித்து படங்களில் காட்சிகள் வைக்கலாம் என அந்தக் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.
சினிமாப் பாடல்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த ஆய்வையும் கடிதத்துடன் மாதர்சங்கம் இணைத்துள்ளதாக அதன் தலைவி வாசுகி தெரிவித்தார்.