பெங்களூரில் 7 பள்ளி குழந்தைகளை காணவில்லை: சென்னைக்கு கடத்தப்பட்டார்களா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் 7 பள்ளிக் குழந்தைகளைக் காணவில்லை. இவர்கள் 6 பேர் சிறுமிகள். ஒருவன் சிறுவன். இவர்கள்சென்னைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட இந்தக் குழந்தைகள் பெங்களூர் இந்திரா நகரில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தவர்கள்.

காணாமல் போனவர்களில் 3 பேர் சகோதரிகள். 8, 11, 13 வயதான இவர்கள் மாநகராட்சிப் பள்ளியில் படித்துவந்தவர்கள்.

மற்ற 4 பேரும் அதே பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்னேஸ் பள்ளியை (St. Annes school) சேர்ந்தவர்கள்.

நேற்று காலையில் இருந்தே இவர்களைக் காணவில்லை. இந்த சிறுவன் மற்றும் சிறுமிகள் பள்ளிக்குப் புறப்பட்டுச்சென்றனர். ஆனால், பள்ளிக்கு வரவில்லை. வழியிலேயே அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இதையடுத்து குழந்தைகளை மீட்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் போலீசாருக்கு சில முக்கியதகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஒரு படை சென்னைக்குவிரைந்துள்ளது.

இதனால் இக் குழந்தைகள் சென்னைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+