சிறையில் என்க்ை கொல்ல முயற்சி: கோபால் புகார்
சென்னை:
சிறையில் விஷ உணவைத் தந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக நக்கீரன் ஆசிரியர் கோபால் பொடா நீதிமன்றத்தில் புகார் கூறினார். இது தொடர்பாக சிறை வார்டனுக்கு ஜெயிலரிடம் இருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் கோபால் தெரிவித்தார்.
இதையடுத்து அது குறித்து விசாரிப்பதாக நீதிபதி உறுதியளித்தார்.
பொடா சட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோபால் காவல் நீட்டிப்புக்காக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி ராஜேந்திரனிடம் கோபால் கூறியதாவது:
சிறையில் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள். எனக்கு தரப்படும் உணவில் விஷம் கலக்குமாறு துணை ஜெயிலர் இளவரசு என்பவர் மூலமாக வார்டன் முரளிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதை வார்டன் முரளியே என்னிடம் தெரிவித்தார். உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடப்பதால் ஜாக்கிரதையாக இருக்குமாறு முரளி என்னை எச்சரித்தார். இது குறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கூறியுள்ளேன் என்றார்.
இதைக் கேட்ட நீதிபதி, கோபாலின் உ.யிருக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை சிறைத்துறை அதிகாரிகளுக்கு உணடு. இது தொடர்பாக அவர்களிடம் விசாரிப்பேன் என்றார்.
இதையடுத்து கோபாலின் சிறைக் காவல் வரும் செப்டம்பர் 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.