கேரளா வந்தார் ரணில்: ஜெயலலிதாவின் ஜோதிடரை சந்தித்தார்
சென்னை :
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை கேரள மாநிலம் வந்தார்.
மாலையில் அவர் சென்னை வருகிறார். 3 நாள் பயணமாக சென்னை வரும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
முன்னதாக சிறப்பு விமானத்தில் இன்று காலை தனது மனைவி மைத்ரியுடன் கோழிக்கோடு வந்திறங்கிய ரணில்அங்கிருந்து ஜோதிடர் பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கரின் வீட்டுக்குச் சென்றார். இவர் தான் முதல்வர்ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்கும் இவரே ஜோதிட ஆலோசகர் ஆவார்.
பணிக்கருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு மலப்புரம் மாவட்டம் திரூரில் உள்ள ஹனுமன் ஆலயத்துக்குச்சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார் ரணில்.
மாலை சென்னை வரும் ரணிலை முதல்வர் ஜெயலலிதா சந்தித்துப் பேசுவார். பின்னர் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றபிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு திரும்புகிறார் ரணில்.












Click it and Unblock the Notifications