For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாமரைக்கனியின் வங்கிக் கணக்கு முடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவர் தாமரைக்கனியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க ஊழல் ஒழிப்புத்துறை போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

தாமரைக்கனி முன்பு அதிமுகவில் இருந்தார். அதன் பிறகு ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகஅதிலிருந்து விலகி சிறிது காலம் அமைதியாக இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். அன்று முதல் அவர் மீதுபல்வேறு வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

அவரது வீட்டில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் தாமரைக்கனியின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்குமாறு அவர் கணக்கு வைத்துள்ள கனராவங்கிக்கு, போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவங்கியிலிருந்து தாமரைக்கனிக்கு கடிதம் வந்துள்ளது.

இதுதொடர்பாக தாமரைக்கனி கூறுகையில், கடந்த ஆண்டு எனது வீட்டில் சோதனை நடந்தபோது, போலீஸாரும்,அரசும் என்னைக் கொடுமைப்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டேன். அதை விசாரித்தநீதிபதி கனகராஜ், தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றார்.

தற்போது எனது எம்.எல்.ஏ. ஓய்வூதியத் தொகையும் கூட முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எனது ஐஸ்பேக்டரியையும் நடத்த விடாமல் தடுத்து செய்து வருகின்றனர். இதுகுறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில்முறையிடவுள்ளேன் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X