குண்டு வெடிப்பு வழக்கு: கோவை வழக்கறிஞர்களுக்கு அரசு சம்பள பாக்கி!!
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில், கைதானவர்களுக்காக வாதாடி வரும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு அரசு பாக்கிவைத்துள்ள 6 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக் கோரி வெள்ளை பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
கோவை தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக வழக்குகளில்160க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர். இவர்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன் வராத காரணத்தால், அரசே, இலவசசட்ட மையம் மூலம் இவர்களுக்காக வாதாட 25 வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தது.
இந்த வழக்கறிஞர்களுக்கு, கோவையைச் சேர்ந்தவராக இருந்தால் நாளொன்றுக்கு ரூ. 1500ம், வெளியூராகஇருந்தால் நாளொன்றுக்கு ரூ. 2,500ம் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கத்தில் சரியாகக் கொடுக்கப்பட்டு வந்த ஊதியம் கடந்த 6 மாதங்களாக வழங்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை வெள்ளை பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தவவக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
இன்று அனைவரும் வெள்ளை பேட்ஜ் அணிந்தே பணியாற்றினர். செப்டம்பர் 1ம் தேதிக்குள் சம்பள பாக்கிவழங்கப்படாவிட்டால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக வழக்கறிஞர்க் கூறியுள்ளனர்.