பெங்களூரில் காணாமல் போன 7 தமிழ் குழந்தைகள் கேரளத்தில் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் காணாமல் போன 7 பள்ளிக் குழந்தைகளும் கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இத் தகவலைபெங்களூர் நகர துணை போலீஸ் கமிஷ்னர் ஜெயப்பிரகாஷ் நாயக் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் குழந்தைகள் சென்னை அருகே நேமம் பகுதியில் உள்ள கல்வி பகவான் கோவிலுக்குப்போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு போலீஸ் படை அங்கு விரைந்தது.

காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 7 பேருமே தமிழ்க் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தம்பதி ராமசாமி- புஷ்பா. இவர்களின் மகள்கள் ராதா(வயது 13), ரேகா (10), செளம்யா (8). இவர்கள் அப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்துவருகின்றனர்.

இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நிமி என்பவரின் மகள் சுதா (13), மகன் குமார் (10). குப்புசாமி என்பவரின்மகள் அனு அருணா (14), முனிராஜூவின் மகள் தனலட்சுமி (14). இந்த நான்கு குழந்தைகளும் இந்திரா நகரில்உள்ள செயிண்ட் ஆன்னேஸ் பள்ளியில் படித்து வருகின்றனர்,.

வியாழக்கிழமை காலை இவர்கள் அனைவரும் சேர்ந்து பள்ளிக்குப் புறப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள்பள்ளிக்கும் செல்லவில்லை. வீடு திரும்பவும் இல்லை. இதனால் இவர்கள் கடத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், போலீஸ் விசாரணையில் இன்னொரு விவரம் தெரியவந்தது.

புஷ்பாவின் குடும்பத்தினர் கல்கி பகவானின் தீவிரமான பக்தர்கள். அடிக்கடி குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இவர் சென்னை அருகே நேமத்தில் உள்ள கல்வி பகவான் ஆலயத்துக்குச் சென்று வருவது வழக்கம்.

இதனால் புஷ்பாவின் 3 குழந்தைகளும் உடன் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கல்கி பகவான் குறித்து நிறையபேசுவார்களாம்.

இவர்களுடன் பயிலும் திவ்யா என்ற மாணவி போலீசாரிடம் கூறுகையில், காணாமல் போன ராதா, ரேகாஆகியோர் நாங்கள் நேமத்தில் உள்ள கல்கி பகவான் ஆலயத்துக்கு போகப் போகிறோம் என என்னிடம்கூறினார்கள் என்று தெரிவித்தார்.

இதனால் இந்தக் குழந்தைகள் அங்கு தான் போயிருக்க வேண்டும் என போலீசார் கருதினர். சென்னைபோலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு இக் குழந்தைகளைத் தேடி பெஙகளூர் போலீஸ் படை ஒன்றுநேமத்துக்குச் சென்றது. ஆனால், அங்கு குழந்தைகள் குறித்து போலீசாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் தவறான பஸ் அல்லது ரயிலில் ஏறி அக் குழந்தைகள் வேறு எங்கோ சென்றிருக்கலாம் என்று சந்தேகம்ஏற்பட்டது. பெங்களூரில் இருந்து சென்ற வெளியூர் பஸ்களில் போலீசார் விசாரித்தபோது 7 பேர் கொண்டகுழந்தைகள் குழு ஏதும் பஸ்சில் ஏறவே இல்லை என்று தெரியவந்தது.

இதனால் அவர்கள் ரயில் மூலம் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் நம்பினார். இதனால் ரயில்நிலையங்களில் இக் குழந்தைகளின் படங்கள் ஒட்டப்பட்டன.

இந் நிலையில் கேரள போலீசார் மூலமாக பெங்களூர் நகர போலீசாருக்கு இக் குழந்தைகள் குறித்து தகவல் வந்துசேர்ந்தது. இவர்கள் அனைவரும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் என்ற இடத்தில் இருப்பதாகவும், ஒருகுழந்தையின் உறவினரின் வீட்டில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

இவர்கள் எப்படி அங்கு போனார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இக் குழந்தைகளை அழைத்து வரபெற்றோரும், போலீஸ் படையும் ஹரிபாட் விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+