துப்பாக்கியை காட்டி மிரட்டல்: ப. சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு
சென்னை:
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவானரங்கநாதன் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்குப் போடப்பட்டுள்ளது.
சென்னை, புரசைவாக்கம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் ரங்கநாதன். நடிகை அஞ்சலி தேவிக்குச்சொந்தமான நிலத்தை பங்கு போடுவது தொடர்பாக கிருஷ்ணன் என்பவருக்கும், அப்துல்ஷேக், திருப்பதிஉள்ளிட்டோருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது அப்துல் ஷேக், திருப்பதி ஆகியோருக்கு ஆதரவாக ரங்கநாதன் செயல்பட்டதாகவும், துப்பாக்கியைக்காட்டி தன்னை மிரட்டியதாகவும் கூறி மதுரவாயல் காவல் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். ஆனால்,அங்குள்ள போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் கிருஷ்ணன். இதைத் தொடர்ந்து கிருஷ்ணனின்புகார் மீது நடவடிககை எடுக்கமாறு காவல் நிலையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ரங்கநாதன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் வைத்திருந்தது,கொலை செய்வதாக மிரட்டியது ஆகிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications