சென்னையிலும் மெட்ரோ ரயில்: ஜெ. தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கொல்கத்தா, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கழக அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

அதி நவீன மெட்ரோ ரயில் சேவை ஏற்கனவே கொல்கத்தா நகரில் இயங்கி வந்தது. அதன் பிறகு சமீபத்தில்டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாதாரண ரயில்களை விட பாதாள மெட்ரோ ரயில்கள் விரைவாக செல்வதோடு, அதி நவீன வசதிகளுடன்இருப்பதால், பயணிகளை பெருமளவில் ஈர்த்துள்ளது. இதில் முதலீடு செய்ய அன்னிய நாட்டு நிறுவனங்கள்போட்டி போட்டு வருகின்றன.

இதனால் இந்தியாவின் மேலும் சில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இதனைப் பயனபடுத்திக் கொள்ள பல மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மும்பை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில்களை விட ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. இந் நிலையில் சென்னை நகரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

இது குறித்து விவாதிக்க டெல்லி மெட்ரோ ரயில் கழக நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையிலான அதிகாரிகள்குழு சென்னை வந்தது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிகாரிகளுடன் இக் குழுவினர் தலைமைச் செயலகத்தில்ஆலோசனை நடத்தினர். ஸ்ரீதரன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரயில் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம், பயணிகளின் எண்ணிக்கை, தேவாையான நிதியாதாரம்போன்றவை குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் விரிவாக டெல்லி குழுவினர் விவாதித்தனர்.

இறுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 5,500 கோடி செலவு பிடிக்கும் என்று தெரிகிறது.

இத் திட்டம் குறித்து மிகத் தீவிரமாக பரிசீலிக்கப் போவதாக டெல்லி குழுவினரிடம் ஜெயலலிதாஉறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+