அரசியல் கூட்டணி: பொதுக் குழுவில் முக்கிய முடிவெடுக்கப்படும்- கருணாநிதி
மதுரை:
அனைத்து விலங்குகளையும் வதை செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்கும்,ஆனால், அப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டு வருவோம் என பா.ஜ.க. உறுதியளிக்குமா என்று திமுக தலைவர்கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்என்று நாங்கள் கூறி வருகிறோம். அந்த நிலையிலிருந்து நாங்கள் பின் வாங்கவில்லை. பின் வாங்க மாட்டோம்.பொடாவை எதிர்த்து தீவிரப் போராட்டம் நடத்தப்படும்.
பொடா சட்டத்தின் கீழ் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு 400 நாட்களுக்கும் மேலாகி விட்டது.அவர்களை விடுதலை செய்யக் கோரி ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்தப்படும். விழுப்புரத்தில் நடக்கும்திமுக பொதுக் கூட்டத்துக்குப் பின் கட்சியின் செயற்குழுவும் பொதுக் குழுவும் கூடும்.
அதில் பொடாவுக்கு எதிராக அடுத்து என்ன செய்வது என்பதை ஆராய்வோம். அதில் நாடாளுமன்றத் தேர்தல்குறித்தும், கூட்டணிகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்கப்படும். அதிமுகவைத் தோற்கடிக்கும் வகையில் எங்கள்அணி அமையும்.
பசு வதையை மட்டும் தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை ஆதரிக்க முடியாது. இது சிறுபான்மையினருக்குஎதிராகக் கொண்டு வரப்படும் சட்டமாகவே கருத முடியும்.
அனைத்து விலங்குகளையும் வதை செய்வதை தடுக்க சட்டம் கொண்டு வந்தால் அதை திமுக ஆதரிக்குமா என்றுபாஜக கேட்கிறது. அதை திமுக நிச்சயம் ஆதரிக்கும்.
அதேசமயம், அனைத்து விலங்குகளையும் வதை செய்யும் சட்டம் கொண்டு வருவோம் என்று பா.ஜ.க.உறுதியளிக்குமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் முதலில் அப்படிப்பட்ட உறுதிமொழியைத் தரட்டும்.
ராமேஸ்வரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைதேவையற்றது, இந்தப் பாலம் தேவையில்லாதது.
இந்த ஆண்டும் அதிமுக ஆட்சியின் புண்ணியத்தில் குறுவை சாகுபடியை தஞ்சை விவசாயிகள் இவந்துவிட்டனர்என்றார் அவர்.