பா.ம.கவின் போக்கு சரியில்லை: மார்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:
தமிழக அரசின் குறைபாடுகளை சுட்டிக் காட்டி விமர்சிப்பதை பா.ம.க. குறைத்துக் கொண்டு விட்டது, அந்தக் கட்சிஅதிமுகவுக்கு ஆதரவாகத் திரும்பி வருகிறது. மொத்தத்தில் பா.ம.கவின் போக்கே சரியில்லை என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளிமக்கள் கட்சி, அதிமுக ஆட்சியின் குறைபாடுகளை விமர்சிக்காமல் மெளனம் சாதித்து வருகிறது. அதிமுக அரசின்தவறுகளை கண்டிக்க மறுக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுக கலந்து கொள்ளும் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம்என்று ஊகிக்க முடிகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து வருகிற 28ம் தேதி டெல்லியில்நடைபெறும் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.