சென்னை விமான நிலையத்தில் கார் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையில் கார் வெடிகுண்டு மூலம் 50 பேர் இறந்த சம்பவம் நாட்டை உலுக்கிக் கொண்டுள்ள நிலையில், சென்னைவிமான நிலையத்தில் கார் வெடிகுண்டு இருப்பதாக ஏற்பட்ட புரளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் வெடிகுண்டுகள் இருப்பதாகசெய்திகள் பரவின. இதையடுத்து வெடிகுண்டுகளை அகற்றும் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கார் பார்க்கிங் அருகே யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் போலீஸ் படையினர் மிகுந்த கவனத்துடன் காரை திறந்து ஆய்வு செய்துபார்த்தபோது, வெடிகுண்டு எதுவும் இல்லை.
இந்தப் புரளி காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications