அயோத்தி: சமாதிகளை தொல்பொருள்துறை மறைத்தது ஏன்?- முஸ்லீம் அமைப்புகள் கேள்வி
டெல்லி:
பாபர் மசூதி இருந்த இடத்தில் தோண்டப்பட்டபோது கிடைத்த மனித எலும்பு கூடுகள், முஸ்லீம்களின் சமாதிகளைதொல்பொருள் ஆராய்ச்சித்துறை மறைத்துவிட்டதாக சன்னி வக்பு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, தொல்பொருள ஆராய்ச்சித்துறையை தன் வசம் வைத்துள்ளசுற்றுலாத்துறை அமைச்சர் ஜக்மோகன், அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் நெருக்குதலுக்குஉட்பட்டே இந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் அறிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தரப்பட்டுள்ளதுஎன முஸ்லீம் தனி நபர் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
நிலத்தைத் தோண்டியபோது கிடைத்த முஸ்லீம்களின் சமாதிகள், புகைத்தப்பட்ட உடல்களின் எலும்புக் கூடுகள்ஆகியவை தொல் பொருள் துறையால் மறைக்கப்பட்டுவிட்டன. அவை நீதிமன்றத்தின் கவனத்துக்கே கொண்டுவரப்படாதது ஏன் என்று வக்பு வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கிடையே கோவில் கட்ட அந்த நிலத்தை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications