கும்பமேளவில் கூட்ட நெரிசல்: 39 பேர் சாவு.. 50 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

நாசிக்:

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடந்த கும்பமேளா விழாவில், புனித நீராடும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39பேர் உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே கும்பமேளா விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் இருந்தும்லட்சக்கணக்கானவர்கள் ராமகுண்ட் நதியில் புனித நீராட நாசிக்கில் குவிந்துள்ளனர். பல்லாயிரம் வெளிநாட்டுப்பயணிகளும் இங்கு குவிந்துள்ளனர்.

இந் நிலையில் இன்று ஷாகி ஸ்னான் எனப்படும் மிக விஷேசமான நீராடல் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கானசாதுக்கள் இதில் ராமகுண்ட் என்ற இடத்தில் உள்ள நதியில் நீராடினர். அவர்களைத் தொடர்ந்து நீராடுவதற்காகலட்சக்கணக்கானவர்கள் காத்திருந்தனர்.

அப்போது சாதுக்கள், கூட்டத்தை நோக்கி நாணயங்களை வீசினர். அதை எடுப்பதற்காக ஆயிரக்கணக்கானவர்கள்ஓடினர். ஒரு குறுகிய பகுதி வழியாக, தடுப்புக் கட்டைகளையும் உடைத்துக் கொண்டு. கூட்டம், கூட்டமாகஓடியபோது நெரிசல் ஏற்பட்டது.

இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் கீழே விழுந்தனர். இதையடுத்து ஏற்பட்ட களேபரத்தில்ஆயிரக்கணக்கானவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில் சுமார் 39 பேர் வரை மூச்சுத் திணறியும், உடல்நசுங்கியும் உயிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.

50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றுஅஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+