தாமன்: ஆற்றுப் பாலம் உடைந்த விபத்தில் 34 பேர் பலி
தாமன்:
தெற்கு குஜராத் அருகே உள்ள தாமன் யூனியன் பிரதேசத்தில் ஆற்றுப் பாலம் உடைந்து வாகனங்கள் நீரில் விழுந்துமூழ்கியதில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துவிட்டது. இவர்கைளத் தவிர மேலும் 8 பேரைக்காணவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இறந்தவர்களில் 23 பேர் பள்ளிக் குழந்தைகள் ஆவர். டையூ, தாமன் யூனியன் பிரதேசத்தில் உள்ள தாமன்கங்காஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நேற்று கடும் மழையில் திடீரென உடைந்து விழுந்தது.
அப்போது அதில் சென்று கொண்டிருந்த ஸ்கூல் வேன், ஆட்டோ உள்ளிட்ட 10 வாகனங்களும், நடந்து சென்றுகொண்டிருந்தவர்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டுள்ளது.
இதனால் இந்த வாகனங்கள் சுமார் 40 அடி ஆழத்துக்கு நீருக்குள் மூழ்கின.
இநதப் பாலம் 100 ஆண்டு பழமையானதாகும். சமீபத்தில் தான் சில ரிப்பேர் பணிகள் நடந்தன எனபதுகுறிப்பிடத்தக்கது. 325 மீட்டர் நீளமுள்ள இந்த ஒரே பாலம் தான் மோத்தி தாமன் மற்றும் நானி தாமன் ஆகியபகுதிகளுக்கு இடையே உள்ள ஒரே இணைப்பாகும்.
இந்த விபத்தில் மேலும் 25 காயமடைந்தனர். இதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் உடல்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்தப்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் தாமன்கங்கா ஆறு, அரபிக் கடலுடன் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.