டிஸ்மிஸ்: 6,072 அரசு ஊழியர்களிடம் செப்-1 முதல் விசாரணை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வழக்குகள் திங்கள்கிழமைமுதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
முதல் நாள் விசாரணையின்போது ஆதி திராவிடர் நலத்துறை, கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறைஅதிகாரிகள் தங்கள் தரப்பு சாட்சிகளைத் தாக்கல் செய்வர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள எண் 7ஏ, 9 மற்றும் 12ஏ ஆகிய பங்களாக்களில் விசாரணை நடைபெறும். காலை10.30 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு விசாரணை முடியும்.
இது தொடர்பாக மேல் விபரம் வேண்டுவோர், 107/3 கிரீன்வேஸ் சாலை, சென்னை-28 அல்லது 24620698 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications