விடுதலை புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏன்ஜெல்ஸ்:

விடுதலைப் புலிகள் இயக்குத்துக்கு உதவிகள் செய்வதைத் தடுக்கும் அமெரிக்கச் சட்டத்தை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அமைப்புகளும், சட்ட அமைப்புகளும் சேர்ந்து தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் அமெரிக்கவெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் மற்றும், அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞர் அட்டர்னிஜெனரல் ஜான் அஷ்கிராப்ட் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களிடம் விசாரணைநடத்தப்படும்.

செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் மீது நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அமெரிக்காவின் தேசப்பற்றுசட்டததில் கடும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி அமெரிக்க அரசால் தீவிரவாத அமைப்பாகஅறிவிக்கப்பட்ட இயக்கங்களுக்கு உதவி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். அதிகபட்சமாக மரணதண்டனையும் வழங்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கமும், துருக்கியைச் சேர்ந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்றஇயக்கமும் தீவிரவாத அமைப்புகளாக அமெரிக்க வெளியுறவுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால்இந்த அமைப்புகளுக்கு உதவி செய்வது சட்டரீதியில் கடுமையான குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து லாஸ் என்ஜெல்ஸைச் சேர்ந்த மனிதாபிமான சட்ட அமைப்பும், நியூயார்க்கைச் சேர்ந்த உலக தமிழ்ஒருங்கிணைப்புக் கமிட்டியும் மேலும் சில அமெரிக்கத் தமிழர் அமைப்புகளும் இணைந்து இந்த வழக்கத்தொடுத்துள்ளன.

அரசியல் சட்ட உரிமைகள் மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் அரசுக்கு எதிராகவாதாட உள்ளனர்.

லாஸ் ஏன்ஜெல்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசப்பற்று சட்டத்தால்பொது மனித உரிமைகள், சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே பல வழக்குகள்தாக்கலாகியுள்ளன. இந் நிலையில், அந்த வழக்குகளுடன் சேர்க்கச் சொல்லி இந்த புதிய வழக்கும் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இதற்கான மனுவை தமிழ் அமைப்புகளும் அரசியல் சட்ட உரிமைகள் மைய வழக்கறிஞர்கள்தாக்கல் செய்தனர்.

அதில், விடுதலைப் புலிகள் இயக்கமும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் தங்கள் மக்களின் பறிக்கப்பட்டஉரிமைகளைத் திரும்பப் பெற போராடி வருகின்றன. இவர்களுக்கு சட்டரீதியிலும் மனிதாபிமானரீதியிலும் உதவிசெய்ய முழு உரிமை உண்டு. இதை தேசப்பற்று சட்டத்தை வைத்து பறிப்பது மனிதாபிமான விரோத செயல் என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+