கல்வி வியாபாரமாகிவிட்டது: ராமதாஸ் வேதனை
சென்னை:
காமராஜரின் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வர பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக பாடுபடும் என்றுஅக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய டாக்டர்ராமதாஸ், காமராஜரின் தலைமைத்துவ பண்பால் கவரப்பட்டவன் நான். நாடு முழுவதிலும் கல்வித் துறைக்குப்புத்துயிர் கொடுத்தவர் அவர்.
காமராஜரின் பல்வேறு கனவுகள் இன்னும் கூட நனவாகாமல் உள்ளன. அதை நிறைவேற்றப் பாடுபட வேண்டும்.அதை பாட்டாளி மக்கள் கட்சி செய்யும். நாட்டில் 30 சதவீதத்திற்கும் மேலான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்குக் கீழேதான் உள்ளனர். கல்வி இன்று வியாபாரமாகி விட்டதுதான் இதற்குக் காரணம்.
காமராஜரின் வாழ்க்கையை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அவரது வாழ்வியல்கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், காமராஜரின் தனி உதவியாளராக இருந்தவைரவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.