47 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 47 தமிழக மீனவர்கள் நேற்று மண்டபம் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
நாகப்பட்டனம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 65 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந் நிலையில் பிடிபட்டமீனவர்களில் 47 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து 47 மீனவர்களும் தங்களது 13 இயந்திரப் படகுகள் மூலம் நேற்று மண்டபத்திற்கு வந்துசேர்ந்தனர். அவர்களை வரவேற்ற அதிகாரிகள் பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்னர்.












Click it and Unblock the Notifications