மதுரை பாண்டி கோவிலில் தடையை மீறி ஜாம் ஜாமென நடந்த கிடா வெட்டு
மதுரை:
கோவில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தடை விதித்துள்ள போதிலும்,மதுரையில் புகழ் பெற்ற பாண்டி கோவிலில் நேற்று ஏராளமான ஆடுகளும், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன.
கோவில்களில் ஆடுகள், கோழிகள் மற்றும் மாடுகள் போன்றவற்றை பலியிடுதல் என்ற பெயரில் படுகொலைசெய்யக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் உத்தரவு எந்தளவுக்கு வரவேற்கப்படுகிறது என்பதை மதுரை பாண்டி கோவிலில் பார்த்தபோதுபுரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் அங்கு வழக்கம் போலவே நேற்று ஏராளமான ஆடுகளும்,கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன.
மதுரை-சிவகங்கை சாலையில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில். மதுரைப் பகுதி மக்களிடையே மிகவும்பிரபலமானது இந்தக் கோவில். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கிடா வெட்டுவதும்,கோழி பலியிடுவதும் வழக்கமாக நடக்கும்.
மதுரை மக்களும், அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் வண்டி கட்டிக் கொண்டு அங்கு போய் கிடா வெட்டி,பொங்கல் வைத்து முனீஸ்வரனை வருகின்றனர்.
பாணடி கோவில் பக்தர்கள் முதல்வரின் உத்தரவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.
நேற்றும் ஆடுகளும், கோழிகளும் வரிசையாக வெட்டப்பட்டுக் கொண்டேயிருந்தன. கிட்டத்தட்ட 120ஆடுகளுக்கும் மேலாக மாலை வரை வெட்டப்பட்டதாக ஒரு ஆடு வெட்டும் பெண்மணி நம்மிடம் தெரிவித்தார்.
ஆடுகள், கோழிகளை வெட்டுவதை போலீஸாரும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தடுத்தால் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்பதால் போலீசார் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
இருப்பினும் கோவில் நிலத்தில் ஒரு ஆடு கூட வெட்டப்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
பாண்டி கோவில் போலவே மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பு கோவில்,தாயமங்கலம் மாரியம்மன் கோவில் ஆகியவற்றிலும் கிடா வெட்டும், கோழி வெட்டும் நேற்று வழக்கம் போலவேநடந்தன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications