For Daily Alerts
Just In
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:
சென்னை கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியது. இதனால் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் வெளியூர்ப் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககாலை 9 மணியளவில், நிலைய அதிகாரிக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசாருக்குத் தகவல் பறந்தது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன், போலீஸ்படை விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.
2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அங்கு போலீஸ்கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Story first published: Monday, September 1, 2003, 5:30 [IST]