For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை கோயம்பேடு வெளியூர்ப் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு புரளி கிளம்பியது. இதனால் அங்குபெரும் பதற்றம் ஏற்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் வெளியூர்ப் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாககாலை 9 மணியளவில், நிலைய அதிகாரிக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது.

இதையடுத்து போலீசாருக்குத் தகவல் பறந்தது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன், போலீஸ்படை விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

2 மணி நேரத் தேடுதலுக்குப் பிறகும் வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அங்கு போலீஸ்கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X