For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மாநாட்டுக்கு வைகோ வாழ்த்து !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விழுப்புரத்தில் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாடு சிறந்த வெற்றி பெறவாழ்த்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட வைகோ பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா, எம்.ஜி.ஆர். பெயர்களை சொல்லிக் கொண்டுதிராவிட இயக்கங்களுக்கே களங்கம் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ஜெயலலிதா.

இப்படிப்பட்டவரின் ஆட்சி உள்ள சூழ்நிலையில், விழுப்புரத்தில் திமுக மாநாடு நடத்தவுள்ளது.இந்த மாநாடு எழுச்சியுடனும், சிறப்புடனும் நடந்து முடிய வாழ்த்துகிறேன்.

கோவில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது, ஆடு, கோழிகளைப் பலியிடுவது மக்களின்அடிப்படை நம்பிக்கை. மதம் சார்ந்த அந்த நம்பிக்கையில் தலையிடுவது போல ஆடு, கோழிகளைபலியிடக் கூடாது என்று தடை விதித்துள்ளார் ஜெயலலிதா. இது கண்டனத்துக்குரியது.

ஏழை மக்களின் மத நம்பிக்கைக்குத் தடை விதித்து விட்டு மறுபுறம் கோவில்களுக்கு யானைகளைகாணிக்கையாக செலுத்துவது, லட்சக்கணக்கில் செலவு செய்து யாகங்களையும், வேள்விகளையும்நடத்துவது என ஜெயலலிதா செயல்படுவது, கடவுள்களிடையே பாகுபாடு பார்ப்பது போலாகும்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும்போது மதிமுகவுக்கு இன்னொரு அமைச்சர் கிடைப்பார்என்று நினைக்கிறோம். இருப்பினும் இதுதொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது பிரதமர்தான்.அமைச்சரை சேர்ப்பதும், நீக்குவதும் அவரது அடிப்படை உரிமை என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X