வாஜ்பாயை சந்திக்க நேரம் கேட்பேன்: கருணாநிதி
திருப்பூர்:
பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வரும்போது அவரை சந்திக்க நேரம் கேட்க திட்டமிட்டுள்ளதாகதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் அடுத்த வாரம்சென்னை வரத் திட்டமிட்டுள்ளார். அப்படி வரும்போது, ஆளுநர் மாளிகையில் தங்குவதாகஇருந்தால், அவரை சந்திக்க நேரம் கேட்பேன்.
முரசொலி மாறனை பிரதமர் சந்திப்பதும், சந்திக்காமல் இருப்பதும் அவரது வசதியைப் பொருத்தது.
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையே தேர்தல் கூட்டணி கிடையாது. அதிமுக அரசை எதிர்ப்பதில்இரு கட்சிகளுக்கும் ஒத்த கருத்து உள்ளதால் சேர்ந்து செயல்படுகிறோம்.
அதிமுக அரசின் ஜனநாயக விரோத ஆட்சியை திமுக கண்டிப்பது போல, பாமகவும், மதிமுகவும்,கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் கண்டிக்கின்றன. எனவேதான் நாங்கள் அனைவரும்சேர்ந்து செயல்படுகிறோம். இதை வைத்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தேர்தல்கூட்டணி ஏற்படும் என்று கூற முடியாது.
திமுகவின் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் பொதுக்குழுவுக்குமட்டுமே உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்அறிவித்துள்ளது அவர்களது சொந்த முடிவு. இப்படிக் கூறியுள்ளதன் மூலம் அவர்களுடன் நாங்கள்கூட்டணி சேர முயற்சிப்போமா என்பதை இப்போது சொல்ல முடியாது என்றார் கருணாநிதி.