செரீனாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரை இளம்பெண் செரீனா மற்றும் அவரது தாயார்சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
கஞ்சா கடத்தியதாக கூறி இளம்பெண் செரீனா மற்றும் அவரது தாயார், கார் டிரைவர் சதீஷ்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் செரீனாவும், தாயார் ரமீஜாவும் ஜாமீன் கோரிமதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வக்கீல் மோகன், பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கோரினார். இதையடுத்து செவ்வாய்க்கிழமைக்குள் பதில்மனுவைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதி சம்பத் குமார் உத்தரவிட்டார். மேலும் வழக்குவிசாரணையையும் இன்றைக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications