For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்லபாம்புடன் நடனம் ஆடியவர் பாம்பு கொத்தி சாவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தலையில் நல்ல பாம்பை வைத்து நடனமாடியவர் அந்த பாம்பு கொத்தியதில் பரிதாபமாகஉயிரிழந்தார்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவர் பாம்புகளை வைத்து நடனமாடிபிழைப்பு நடத்தி வந்தார். 7ம் தேதி இரவு மேலூர் அருகே உள்ள வல்லாளபட்டி என்ற கிராமத்தில்நடந்த கலை நிகழ்ச்சியில் அமர்நாத்தின் பாம்பு சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட அமர்நாத் பல வகை பாம்புகளுடன் நடனமாடினார். அப்போது பல்பிடுங்கப்படாத நல்ல பாம்பு ஒன்றை தலையில் வைத்து நடனமாடத் தொடங்கினார் அமர்நாத்.கூடியிருந்தவர்கள் அனைவரும் திகிலோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தலையில் இருந்த நல்லபாம்பு திடீரென்று அவரது தலையில் கொத்தியது. தலையில்பாம்பு கொத்தியதால் உடனடியாக மயங்கி விழுந்தார் அமர்நாத். அவரை மதுரை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X