சிறு சர்ச்சுகளை இணைக்க புதிய சங்கம் உதயம்!
சென்னை:
தமிழகம் முழுவதிலும் விரவிக் கிடக்கும் சிறு, சிறு சர்ச்சுகளை இணைத்து சுயேச்சை சர்ச்சுகள் சங்கம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ரோமன் கத்தோலிக்க பேராலயங்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபை சங்கம்ஆகியவை உள்ளன. இந்த அமைப்புகளின் கீழ் உள்ள சர்ச்சுகளுக்கு மட்டுமே அரசு அங்கீகாரம்வழங்கியுள்ளது. ஆனால் இந்த இரண்டு அமைப்புகளிலும் சேராமல், தமிழகம் முழுவதிலும்ஏராளமான சிறு சிறு சர்ச்சுகள் உள்ளன.
இந்த சிறு சர்ச்சுகளுக்கு அரசு அங்கீகாரம் கிடையாது. இங்கு நடக்கும் திருமணங்கள்அங்கீகரிக்கப்படுவதில்லை, மேலும் நிதியுதவியும் கிடைப்பதில்லை. இதைத் தொடர்ந்து சிறுசர்ச்சுகளை இணைத்து இந்திய சிறு சர்ச்சுகள் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் மோசஸ்செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதிலும் 7000 சிறு சர்ச்சுகள் உள்ளன. இவற்றிற்குஏராளமான இடர்பாடுகள் உள்ளன.
இவை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காகவே இந்த அமைப்புதொடங்கப்பட்டுள்ளது. இவற்றின் நிர்வாகத்தை அந்தந்த சர்ச்சுகளே கவனித்துக் கொள்ளும். ஆனால்பிரச்சினைகள் ஏற்பட்டால் இந்திய சிறு சர்ச்சுகள் சங்கம் என்ற பெயரில் அதை சந்திப்போம் என்றார்அவர்.